Private Sector Employment Camp in Ranipettai District


ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல், பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் இளைஞர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமிற்கு வருவோர் தங்களது சுய விவரம், ஆதார் அட்டை, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நெமிலி, சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், நாளை (புதன்கிழமை) ஆற்காடு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், வருகிற 31-ஆம் தேதி வாலாஜா, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் நடக்கிறது.

வருகிற 6-ந் தேதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விழா நடக்க உள்ளது. ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.