மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும்.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்படுகிறது.சிவலிங்கத்திற்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்ய முடியாவிட்டாலும், அருகில் உள்ள சிவன் ஆலயத்தில், அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பூஜைக்குரிய பொருட்களை வாங்கித் தருவது உத்தமம்.அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடையுங்கள்.

மகா சிவராத்திரி என்றால் என்ன? Mahashivratri 2022: Puja Timing, Puja Vidhi, Mahurat, History, Significance And More


மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும். இந்த நாளில் சிவனுக்குரிய விரதமிருந்து, அன்றைய தினம் முழுவதும் விழித்திருந்து இறைவனுக்கு அபிஷேகம், அலங்கார, பூஜை ஆராதனை செய்ய வேண்டிய நாள்.

இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாத்தில் வரக்கூடிய தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும், சிவனுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை ‘மகா சிவராத்திரி கற்பம்’ என்ற சிறிய நூலில் விளக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தில் என்ன செய்ய வேண்டும்?


நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாதம் ஒருமுறை மாத சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமாவது நாம் சுத்தபத்தமாகவும், உண்ணா விரதம் இருந்து சிவபெருமானுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்து வழிபடுவது நல்லது.

நாம் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்ய முடியாவிட்டாலும், அருகில் உள்ள சிவன் ஆலயத்தில், அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பூஜைக்குரிய பொருட்களை வாங்கித் தருவது உத்தமம்.

மகா சிவராத்திரி 2022 எப்போது? Maha Shivaratri 2022: Know Date, Prahar Puja Time and Vrat Vidhi


மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 மார்ச் 1ம் தேதி அதிகாலை 2.51 மணி வரை திரியோதசி பின்பு சதுர்த்தி திதி வருவதால், மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடையுங்கள்.

மகா சிவராத்திரி வழிபாடு எப்போது தோன்றியது? Maha Shivratri 2022: Here is why we celebrate the auspicious festival!


பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களும் அழிந்து விட்டன. அந்த மோசமான இரவுப் பொழுதில், அன்னை உமாதேவி, சிவபெருமானை நினைத்து விரதமிருந்து பூஜித்து வந்தார்.

அதோடு இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி சிவனுக்கு உரிய அபிஷேக, அலங்கார, அர்ச்சனை செய்து வழிபட்டார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக் கொண்டார்.

தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவராத்திரி’ என்று கொண்டாடப்பட வேண்டும். அப்படிப்பட்ட அற்புத நாளில் தேவர்களும், மனிதர்களும் சிவ ராத்திரி என்ற பெயரில் ஈசனை விரதமிருந்து வழிபடும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Mahashivratri 2022: Banks to Remain Shut in These States on Maha Shivratri