👉 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோள்களை கண்டறிந்தார்.

👉 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.


பிறந்த நாள் :-


சடாகோ சசாகி 

🌟 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🌟 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.

🌟 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.

🌟 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

🌟 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் (1955) மறைந்தாள்.


சரோஜாதேவி

 
🌟 அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி 1938ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார்.

🌟 சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

🌟 1958 ஆம் ஆண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படமாகும்.

🌟 திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ, மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசால் எம்.ஜி.ஆர் விருது, ஆந்திர அரசால் என்.டி.ஆர் தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

🌟 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.


தங்கம்மா அப்பாக்குட்டி

🌟 சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார்.

🌟 தமிழையும் சைவ சமயத்தையும் முறையாக கற்று,1952-ல் பால பண்டிதராகத் தேர்ச்சி பெற்றார். 1958-ல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டமும் பெற்றார்.

🌟 இவரது கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. யாழ் பல்கலைக்கழகம் 1998-ல் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது.

🌟 சிவத்தமிழ்ச் செல்வி, திருவாசகக் கொண்டல், செஞ்சொற் செம்மணி, சிவஞான வித்தகி, துர்க்கா புரந்தரி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும் பல்வேறு விருதுகள், பரிசுகள், பதக்கங்களையும் பெற்றவர்.

🌟 தமிழுக்கும் ஏழை, எளியவர்களுக்கும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி தன்னுடைய 83-வது வயதில் (2008)மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.

1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.

1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.

1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.

1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1785 – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.

1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

1846 – இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.[2]

1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1935 – பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1939 – மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.

1950 – அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.

1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.

1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

1999 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.

2005 – இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.

2015 – பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

2015 – யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டான்ர்.

இன்றைய தின பிறப்புகள்


1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585)

1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)

1844 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (இ. 1879)

1851 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)

1920 – அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)

1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர் (i. 2008)

1938 – பி. சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1943 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. 1955)

1945 – சுலாமித் பயர்சுடோன், கனடிய பெண்ணியவாதி (இ. 2012)

1948 – சோபா டே, இந்திய எழுத்தாளர்

1948 – இசிரோ மிசுகி, சப்பானியப் பாடகர், நடிகர்

1953 – பாக்கியராஜ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1967 – இர்பான் கான், இந்திய நடிகர் (இ. 2020)

1971 – ஜெரமி ரெனர், அமெரிக்க நடிகர்

1972 – எஸ். பி. பி. சரண், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்

1976 – ஹரிஷ் ராகவேந்திரா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்

1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1943 – நிக்கோலா தெஸ்லா, செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1856)

1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)

1987 – லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)

1989 – இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)

1995 – சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)

1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)

1996 – வி. குமார், தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1934)

2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1941)

2015 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (பி. 1927)

2015 – ஜார்ஸ் போலான்ஸ்கி, துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞர் (பி. 1934)

2016 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)

இன்றைய தின சிறப்பு நாள்

 நத்தார் (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டி)

இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை (கம்போடியா)