ராணிப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 47) தொழிலாளி. திருமணமாகாதவர். இவர் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மன உளச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.