✈ 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பர்கதுல்லா மறைந்தார். 

📝 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தி ஹிந்து இதழ் வெளிவரத் துவங்கியது. 

📨 1847ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டானியா, மொரீசியசில் வெளியிட்டது. 

🏁 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 

🚀 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி துருவ செயற்கை கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.


நினைவு நாள் :-

🌺 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசன்ட் அம்மையார் மறைந்தார்.


பிறந்த நாள் :-


மார்க்கண்டேய கட்சு

📰 முன்னாள் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாகவும், உயர்நீதி மன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த மார்க்கண்டேய கட்சு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார். 

📰 இவர் 1967 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.

📰 இவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புது தில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைகழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார்.

📰 இவர் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011 - 2014) இருந்தார். சமூக மாற்றத்திற்கான நல்ல கருத்துகளைப் பரப்பிய இவர் தனது 71வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 


ஜேம்ஸ் திவார்

🍼 வாக்கும் பிளாஸ்க்கை (vacuum flask) கண்டுபிடித்த ஜேம்ஸ் திவார் 1842ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தார்.

🍼 இவர் 1897ல் இரட்டைசுவர் கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களை செய்த போது, குளிர் நிலையில் மட்டுமல்ல, வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதை கண்டறிந்தார்.

🍼 வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறிவிட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். பிறகு, கார்டைட் என்ற வெடிப்பொருளை கண்டுபிடித்தார்.

🍼 இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவித வாயுக்களை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்து உள்ளிருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறா தன்மையை சோதனை செய்தார்.

🍼 கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான, விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த ஜேம்ஸ் திவார், தனது 80வது வயதில் (1923) மறைந்தார்.