🏫 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

📺 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி கண்டங்களுக்கு இடையேயான முதலாவது நேரடி தொலைக்காட்சி ஜப்பானில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஒளிபரப்பப்பட்டது.

💽 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வன்தட்டு நினைவகத்தை (computer disk memory) கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

🌇 1781ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்பானிய கவர்னரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைக்கப்பட்டது.


பிறந்த நாள் :-

தாதாபாய் நவ்ரோஜி

🏁 சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🏁 இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.

🏁 1852-ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

🏁 இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

🏁 இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

🏁 பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

🏁 சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் (1917) மறைந்தார்.