முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருத்தணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



பணியிட விபரங்கள்:

1. எலெக்ட்ரீஷியன்

மொத்த எண்ணிக்கை: 10 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

10, +2 கல்வி முறையின் கீழ் அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகப்பட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விகிதம்:

அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 8,000 முதல் அதிகப்பட்சம் 10,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப / தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) https://apprenticeshipindia.org இணையத்தளத்தில் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 06-09-2021

1. எலெக்ட்ரீஷியன் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்