ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிரேனில் இருந்து இரும்பு பைப் ஒன்று ஜெய்சங்கரின் மீது விழுந்தது. இதில் ஜெய்சங்கர் பலத்த காயம் அடைந்தார்.

இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து ஜெய்சங்கர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.