ஆற்காடு நல்லதண்ணீர்குளம் தெருவை சேர்ந்தவர் தினேஷ் ( 23 ) , தனியார் நிறுவன ஊழியர் . இவர் கடந்த 20 ம் தேதி ஆரணியில் நடந்த நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்றார். பின்னர் ஊர் திரும்பினார்.
திமிரி அருகே உள்ள பரதராமி கூட்ரோட்டிற்கு வரும்போது வேகத்தடையில் அவரது பைக் மோதியது. இதில் தினேஷ் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவம்னைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் தினேஷ் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அவரது தந்தை அருள் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சேட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் .