ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் கண்டிகையை சார்ந்த சிகாமணி மகன் சிலம்பரசன் (30). கைனூர் நேதாஜி நகரை சார்ந்த வெங்கடேசன் மகன் ரவி ராகுல் (21). இவர்கள் நேற்று இரவு ஒரே பைக்கில் அரக்கோணத்திற்க்கு சென்று கைனூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சோளிங்கர் ரோடு நேதாஜி நகர் அருகே சோளிங்கரிலிருந்து அரக்கோணம் நோக்கி எதிரே வேகமாக வந்த காரும் பைக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ரவி ராகுலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.