🌐 2003ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மொசில்லா பயர் பாக்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

🏆 1955ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

🏁 1857ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சிப்பாய் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.


பிறந்த நாள் :-

காமராஜர்

📖 கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📖 தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

📖 1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1940ல் விருதுநகர் நகராட்சித் தலைவர், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

📖 இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

📖 இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், ஈ.வே.ரா.,பச்சைத் தமிழன் என்றும் பாராட்டியுள்ளார்.

📖 பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் (1975) மறைந்தார். மறைவுக்குபின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


மறைமலை அடிகள்

✍ தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் பிறந்தார். 

✍ தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

✍ மேலும் இவர் முருகவேள் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.

✍ மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 74வது வயதில் (1950) மறைந்தார்.


துர்காபாய் தேஷ்முக்

🏁 சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காபாய் தேஷ்முக் 1909ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் பிறந்தார்.

🏁 இவர் காந்திஜிக்கு மிகவும் பிரியமான தொண்டர். 1923-ல் பெண்களுக்கான பள்ளியை தொடங்கி, அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்தார். அதை பாராட்டி காந்திஜி தங்கப்பதக்கம் தந்தார்.

🏁 பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். சமூக சேவைகளின் அன்னை என்று இந்திரா காந்தி புகழாரம் சூட்டினார்.

🏁 நாட்டில் முதன்முதலில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்த இரும்புப் பெண்மணி துர்காபாய் தேஷ்முக் 72வது வயதில் (1981) மறைந்தார்.