வேலூர் மாவட்டம் பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக மாட்டுச்சந்தை மூடப்பட்டிருந்தது.

தொற்று குறைவு காரணமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 13 ஆம் தேதியான நேற்று மாட்டுச்சந்தை கூடியது. சந்தைக்கு ஏராளமான கறவை மாடுகள் கால்நடை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் விலை உயர்ந்த கறவை மாடுகள் விற்பனை ஆனது. நேற்றைய ஒரே நாளில் ரூபாய் ஒரு கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். மாட்டு சந்தையை தொடர்ந்து பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை காய்கறி சந்தை நடைபெற்றது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.