ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த காமாட்சியம்மன் உடனுறை பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது

இந்த ஆலயத்தில் நேற்றிரவு சமூகவிரோதிகள் சிலர் கோயில் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள காமாட்சி அம்மன் சிலையை சேதப்படுத்தியும் அம்மனின் ஆடைகளை களைத்தும் மிகவும் அருவருக்கத்தக்க செயல் ஈடுபட்டிருக்கின்றனர்

இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி பிரமுகர்கள் உடனே காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.