ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் கடந்த பல நாட்களாகக் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், அன்றாடம் பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகளை அகற்றப்படாததால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது என்று கூறி நடவடிக்கை மேற்க்கொள்ளாத அரக்கோணம் நகராட்சியை கண்டித்து அலுவலகம் நுழைவு வாயிலில் அமர்ந்து உணவு உண்ணும் நூதன போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர். 

கால்வாய்களைத் தூர்வாரபடாததால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் அரக்கோணம் மக்களைக் கொண்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர். இளைஞர்களின் இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.