ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்‌ களாட்ஸ்டன்‌ புஷ்பராஜ்‌ வெளியிட்டுள்ள செய்திக்‌ குறிப்பில்‌ கூறியிருப்பதா வது:

தமிழ்நாடு வக்‌ஃபு வாரியத்தில்‌ பதிவு செய்து ராணிப்பேட்டை மாவட்‌டத்தில்‌ உள்ள 98 வக்‌ஃபு. நிறுவனங்களில்‌ பணி, செய்யும்‌ உலமாக்கள்‌ தங்‌கள்‌ பணியை சிறப்பாக செய்ய புதிய இருசக்கர. வாகனங்களை வழங்க: மானிய திட்டம்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்‌திட்டத்தின்‌ விண்‌ணப்பிக்கும்‌ தகுதியுள்ள நபர்களுக்கு வாகனத்தின்‌ மொத்த விலையில்‌ 30 சதவீதம்‌ அல்லது ₹25 ஆயிரம்‌ என இதில்‌ எது குறைவோ? அத்தொகை மானியமாக வழங்கப்படும்‌.

'விண்ணப்பிக்க விரும்‌புவோர்‌ குறைந்தது. ஆண்‌டுகள்‌ வக்‌ஃபு வாரியத்தில்‌ பணி செய்திருக்க வேண்‌டும்‌.தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்‌. 18 முதல்‌ 40 வயதிற்கு உட்பட்‌டவராக இருக்க வேண்‌டும்‌. விண்ணப்பிக்கும்‌. போது எல்‌எல்‌ஆர்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குறைந்த: பட்சமாக 8ம்‌ வகுப்பு: தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. பயணாளி வாங்கும்‌ இருசக்கர வாகனம்‌ புதிய தொழில்‌ நுட்‌பத்துடன்‌ 125 சிசி க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. ஆதார்‌ அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை, வயது சான்று, வருமான சான்று, புகைப்படம்‌, மாற்றுத்திறனாளியாக இருந்தால்‌ அதற்கான சான்று, சாதிச்சான்று, ஒட்டுனர்‌ உரிமம்‌ அல்லது. எல்‌எல்‌ஆர்‌, கல்வி தகுதிச்‌சான்றும்‌ 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, வங்கிகணக்கு, ஐஎப்‌ எஸ்சி கோட்‌ ஆ௫ியவற்றின்‌ வங்கி கணக்கு புத்தகம்‌ முதல்‌ பக்கநகல்‌, எத்தனை ஆண்டுகள்‌ பணிபுரிகிறார்‌. என்பதற்கான சான்றுகள்‌ பெறப்பட்டு வக்‌ஃபு வாரிய கண்காணிப்பாளர்‌ ஒப்புதலுடன்‌ விண்ணப்‌பிக்க வேண்டும்‌. வாகனத்‌திற்கான விலைபட்டியல்‌, விலை புள்ளி இணைக்கப்‌பட வேண்டும்‌.

மானிய விலையில்‌ இருசக்கர வாகனம்பெறத்‌: தேவையான விவரங்கள்‌, படிவத்தினை மாவட்ட கலெக்டர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ அலு:வலகத்தில்‌ வருகிற 23ம்‌ தேதிக்குள்‌ சமர்பிக்க வேண்டும்‌.

இவ்வாறு அதில்‌ கூறப்‌பட்டுள்ளது.