👉 1911ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
🚭 உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
🚭 புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டு செல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
நினைவு நாள் :-
👉 1976ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட்(Jacques Lucien Monod) மறைந்தார்.
பிறந்த நாள் :-
வால்ட் விட்மன்
✍ அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
✍ இவர் சாங் ஆஃப் மைசெல்ஃப் என்ற கவிதை நூலையும், பிராங்க்ளின் இவான்ஸ் என்ற நாவலையும் எழுதியுள்ளார். அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து Free Soil (சுதந்திர பூமி) என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.
✍ கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க ஆபிரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.
✍ போர் வெற்றி பெற்ற 5-ம் நாளில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மனவேதனையில் விட்மன் எழுதிய ஓ கேப்டன், மை கேப்டன் என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
✍ பல போராட்டங்களை கடந்து தனக்கான அங்கீகாரத்தை பெற்ற புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மன் 72வது வயதில் (1892) மறைந்தார்.