ராணிப்பேட்டையில் தந்தை இறந்த தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் மகளும் உயிரிழந்தார்.

தந்தை-மகள் சாவு

ராணிப்பேட்டை காரை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 62). இவர், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். 

இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அதில் 2 மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. சுவாச பிரச்சிைனயால் அவதிப்பட்டு வந்த சம்பத் இன்று காலை திடீரென வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து விட்டார். 

இந்தத் தகவல் அதே பகுதியில் உள்ள அவரின் மூத்த மகள் ரேணுகாதேவி (32)-க்கு தெரிவிக்கப்பட்டது. தந்தை உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் ரேணுகாதேவியும் திடீெரன மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.

 அவரை, குடும்பத்தினர் மீட்டு  ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரேணுகாதேவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மக்கள் சோகம் 

இதையடுத்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த இருவரின் உடல்களையும், ஒரே இடத்தில் வைத்து குடும்பத்தினரும், உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 தந்தை இறந்த தகவலை கேட்ட மகள் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைேய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.