தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
திரையரங்குகள், உடற்பயிற்ச்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள் , பார்கள், பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. வரும் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. 

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.