ராணிபேட்டை மாவட்டம் சோளிங்க பஸ் நிலையம் அருகே தனியார்செல்போன் டவர்உள்ளது. கடந்த 4 வருடங்களாக இந்த டவர் பயன்படாமல் செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் செல்போன் டவரை அகற்றும் பணி நடந்துள்ளது.

அப்போது அருகில் உள்ள பேட்டரி அறையில் திடீரெனத் தீப்பற்றி உள்ளது. இதைக் கண்ட பணியாளர்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.