ஆற்காடு அருகே ரத்தினகிரி யில் பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா நேற்று நடந்தது . 
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது . இக்கோயிலில் நேற்று மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது . 

இதில் , ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார் . மார்கழி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங் காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . 

இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து , சமூக இடை வெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . முன்னதாக வெப்ப அளவு பரிசோதனை , சானிடைசரால் பக்தர்கள் கைகள் சுத்தம் செய்தபின் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் .