ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதியதால் அவர் உயிரிழந்தார்.


ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த வாணாபாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அசோக்குமார் (39). இவரது மகன் பரமேஸ்வரன் (8). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவ் வழியாக தனியாருக்கு சொந்தமான வேன் வேகமாக வந்து சிறுவன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரன் உயிரிழந்தார்.

இது குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.