ஆற்காட்டில் பதினெட்டு சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இரண்டில் ஸ்ரீ அகத்தியரை மூலவராகக் கொண்டு பதினெட்டு சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஆக சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் முன்னதாக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு புனிதநீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது