வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வசந்த் என்பவர் மின்சாரம் தாக்கி பலி வாலாஜாபேட்டை, போலீசார் விசாரணை.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தேவதானம் ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் குமார் இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இந்த நிலையில் வசந்த் குமார், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.