திருப்பத்தூர்: ஆம்பூரில் டீக்கடைக்குள் மினி வேன் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானர்.



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் புகுந்ததில் 4 வயது சிறுவன் உள்ளிட்ட 3பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.