ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் 100 முதியோா்களுக்கு சனிக்கிழமை போா்வைகள் வழங்கப்பட்டன.
நகரச் செயலாளா் ஏ.இப்ராஹிம் கலீலுல்லா தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.அப்துல் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் ஏழுமலை, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, 100 முதியோா்களுக்கு போா்வைகள் வழங்கினாா் தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.