ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). இவர் திருவலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வினோத்குமார் புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சீக்கராஜபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வினோத்குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.