🎥 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்திய திரைப்பட இயக்குனர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்தார்.


✍ அடிமைத்தனத்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளியும், கவிஞரும், கல்வியாளருமான ஷார்லட் லூயிஸ் கிரிம்கீ 1837ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில் வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் பிறந்தார்.

📀 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலாவது இறுவட்டு(CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

🚢 1807ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.

✍ 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு (எல்லைக்கோடு) வெளியிடப்பட்டது.


நினைவு நாள் :-


🏁 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மதன் லால் டிங்கரா மறைந்தார்.


பிறந்த நாள் :-


பிரெடரிக் ரஸல்

💉 ராணுவத்தில் டைஃபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவரான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள அபர்ன் நகரில் பிறந்தார்.

💉 ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைஃபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், டைஃபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர்.அல்ம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

💉 இவர் டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார். பிறகு, ராணுவ வீரர்களுக்கு 1910 முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அது நல்ல பலனைத் தந்ததால், 1911-ல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.

💉 பொதுநலத் திட்டங்களில் இவரது பங்களிப்பை பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி 'பப்ளிக் வெல்ஃபேர்' பதக்கம் வழங்கியது. அடுத்த 4 ஆண்டுகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.

💉 டைஃபாய்டு தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, இறுதிவரை நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் தனது 90வது வயதில் (1960) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார்.

1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார்.

1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது.

1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர்.

1585 – வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர்.

1668 – உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர்.

1712 – டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.

1717 – ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின.

1740 – பன்னிரண்டாம் கிளெமெண்டுக்குப் பின்னர் பதினான்காம் பெனடிக்டு 247-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1807 – இராபர்ட் புல்டனின் நோர்த் ரிவர் நீராவிக் கப்பல் நியூயோர்க் நகரில் இருந்து ஆல்பெனி நோக்கி அட்சன் ஆற்றில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதுவே உலகின் முதலாவது நீராவிக் கப்பல் பயணிகள் சேவை ஆகும்.

1836 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பிறப்பு, திருமண, இறப்புப் பதிவுகளை சட்டபூர்வமாக்கியது.

1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்; லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1918 – போல்செவிக் புரட்சித் தலைவர் மொயிசேய் யுரீத்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் செருமனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் ரூசவெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவித்தது. இடச்சுப் பேரரசுக்கு எதிரான இந்தோனேசிய தேசியப் புரட்சி ஆரம்பமானது.

1947 – இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1958 – அமெரிக்காவின் சந்திரனைச் சுற்றும் முதலாவது திட்டம் பயனியர் 0 விண்ணுக்கு ஏவப்பட்டு 77 செக்கன்களில் அழிந்தது.

1959 – மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.

1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற தரம் 5 சூறாவளியில் 256 பேர் உயிரிழந்தனர்.

1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1977 – சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும்.

1988 – பாக்கித்தான் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.

1999 – வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2005 – காசாக்கரையில் இருந்து இசுரேலியர்களின் கட்டாய வெளியேற்றம் ஆரம்பமானது.

2005 – வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் 300 இடங்களில் ஐநூறுக்கும் அதிகமான குண்டுகள் தீவிரவாதிகளினால் வெடிக்க வைக்கப்பட்டன.

2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

2009 – உருசியா, அக்காசியாவில் அணை ஒன்று உடைந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

2015 – பேங்காக், பிரம்மன் கோயிலில் குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், 123 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1607 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665)

1761 – வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)

1874 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (இ. 1945)

1882 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (இ. 1973)

1920 – அ. வரதராசன், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 2009)

1926 – யான் சமீன், சீனாவின் 5வது அரசுத்தலைவர்

1932 – வி. சூ. நைப்பால், நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2018)

1934 – முரசொலி மாறன், இந்திய அரசியல்வாதி (இ. 2003)

1943 – ரொபேர்ட் டி நீரோ, அமெரிக்க நடிகர்

1944 – லாரி எலிசன், அமெரிக்கத் தொழிலதிபர்

1950 – வாசுதேவன் பாஸ்கரன், வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர்

1953 – எர்ட்டா முல்லர், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-செருமானியக் கவிஞர், எழுத்தாளர்

1959 – டேவிட் கொரேஷ், அமெரிக்க மதத் தலைவர் (இ. 1993)

1962 – தொல். திருமாவளவன், தமிழக அரசியல்வாதி

1963 – சங்கர், இந்தியத் திரைப்பட இயக்குநர்

1970 – ஜிம் கூரியர், அமெரிக்க டென்னிசு ஆட்ட வீரர்

1977 – தியெரி ஹென்றி, பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்

1990 – குசல் பெரேரா, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இன்றைய இறப்புகள்


1850 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1778)

1909 – மதன் லால் டிங்கரா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1883)

1969 – ஆட்டோ ஸ்டர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1888)

1969 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1886)

1983 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி, தமிழ்நாடு அமைச்சர் (பி. 1926)

1986 – எம். ஜி. சக்கரபாணி, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (பி. 1911)

1988 – சியா-உல்-ஹக், பாக்கித்தானின் 6வது அரசுத்தலைவர் (பி. 1924)

2007 – தசரத் மான்ஜி, இந்தியப் பொறியாளர் (பி. 1934)

2021 – ஜோக்கிம் பெர்னாண்டோ, இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடக நடிகர்

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (இந்தோனேசியா, சப்பானிடம் இருந்து 1945)

விடுதலை நாள் (காபோன், பிரான்சிடம் இருந்து 1960)