👉 1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் மறைந்தார்.



பிறந்த நாள் :-


அடா யோனத்

👉 படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் (Ada Yonath) 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.

👉 ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

👉 20 ஆண்டுகால கடுமையான உழைப்பில் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை (ribosome) ஆன்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என்று கண்டறிந்தார். இவை ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்ய வழிவகுத்தன.

👉 ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.

👉 நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய இவர் இன்று 80வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


டான் பிரவுன்

👉 கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் (Dan brown) 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியு ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் (Exeter) பிறந்தார்.

👉 பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்கு 1991-ல் வந்தார். மேலும், இவர் 'டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்', 'டிஸப்ஷன் பாயின்ட்', 'ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். 

👉 2003-ல் வெளிவந்த இவரது 'தி டாவின்சி கோட்' என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

👉 தொடர்ந்து தன்னுடைய எழுத்து பணியை செம்மையாக செய்து வரும் டான் பிரவுன், தனது 55வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது.

813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார்.

1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர்.

1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

1658 – மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.[1][2]

1774 – வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர்.

1783 – ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது.

1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது.

1893 – அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.

1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.

1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.

1918 – அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.

1921 – எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.[3]

1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.

1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.

1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.

1948 – 802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.[4]

1957 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

2002 – ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.

2009 – வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1805 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872)

1856 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய புதின எழுத்தாளர் (இ. 1925)

1864 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, செருமானியக் கணிதவியலாளர் (இ. 1909)

1892 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (இ. 1951)

1912 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழகக் கடம் கலைஞர் (இ. 1975)

1927 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2011)

1932 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (இ. 2005)

1940 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1944 – எ. சிட்னி சுதந்திரன், தமிழக எழுத்தாளர்.

1949 – மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க நடிகை, பாடகி

1949 – எலிசபத் வொரன், அமெரிக்க அரசியல்வாதி

1964 – டான் பிரவுன், அமெரிக்க எழுத்தாளர்

1974 – எலன் ஜோ காக்சு, பிரித்தானிய அரசியல்வாதி (இ. 2016)

1974 – விஜய், இந்திய நடிகர்

1974 – தேவயானி, இந்தியத் திரைப்பட நடிகை

1984 – யான்கோ டிப்சாரெவிச், செர்பிய டென்னிசு விளையாட்டு வீரர்

1984 – ஜெரோம் டெய்லர், யமெய்க்காத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்


1874 – ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கிலேய சதுரங்க வீரர் (பி. 1810)

1940 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (பி. 1846)

1969 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1922)

1987 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1899)

2007 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1921)

2014 – ராம நாராயணன், இந்திய இயக்குநர் (பி. 1949)

2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (பி. 1934)

2021 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக் கலைஞர் (பி. 1924)

இன்றைய தின சிறப்பு நாள்


தந்தையர் தினம் (குயெர்ன்சி, மாண் தீவு, யேர்சி)

ஆசிரியர் நாள் (எல் சால்வடோர்)