வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த ஏகாம்பரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (34), பிரபு (36) இவர்கள் இருவரும் வெல்டிங் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் ஏகாம்பரநல்லூர் பகுதியில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றுள்ளனர். அப்போது லோடுவேன் பழுதடைந்த மற்றொரு வேனை கட்டி இழுத்து வந்துள்ளனர். எதிர்பாராமல் பழுதடைந்த வேனை இழுத்து வந்த சங்கிலி அறுந்து அந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சந்திரசேகர், பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சிப்காட் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.