👉 1915ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.


👉 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தென் கொரியா உருவாக்கப்பட்டது.

👉 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொங்கோ குடியரசு பிரான்ஸிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.


முக்கிய தினம் :-


இந்திய சுதந்திர தினம்

👉 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

👉 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

👉 தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பிறந்த நாள் :-


நெப்போலியன் போனபார்ட்

👉 பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.

👉 இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.

👉 போர்களில் வெற்றியைக் குவித்தார். தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை கோட் ஆஃப் நெப்போலியன் எனப்படுகின்றன. முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் (1821) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.

717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது.

927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள்.

1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான்.

1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.

1248 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.

1261 – பைசாந்தியப் பேரரசராக எட்டாம் மைக்கேல் பலையோலோகசு கான்ஸ்டண்டினோபில்லில் முடிசூடினார்.

1281 – சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன.

1461 – திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

1483 – சிஸ்டைன் சிற்றாலயத்தை திருத்தந்தை நன்காம் சிக்ஸ்டசு புனிதப்படுத்தினார்.

1511 – போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான்.

1519 – பனாமா நகரம் நிறுவப்பட்டது.

1534 – லொயோலா இஞ்ஞாசியும் அவரது ஆறு தோழர்களும் ஆரம்ப உறுதியை எடுத்தனர். இது 1540 செப்டம்பரில் இயேசு சபை உருவாகக் காரணமானது.

1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.

1599 – ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன.

1914 – அமெரிக்கக் கட்டடக் கலைஞர் பிராங்க் லாய்டு ரைட்டின் பணியாள் ஏழு பேரைக் கொலை செய்து, ரைட்டின் விஸ்கொன்சின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினான்.

1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.

1914 – முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.

1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.

1939 – போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 போர் வானூர்திகளில் 13 தரையில் மோதி எரிந்து அழிந்தன.

1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றித் தாக்கி மூழ்கடித்தது.

1941 – யோசெப் யாக்கோப்சு என்ற ஆங்கிலேயெ இராணுவ வீரர் உளவு நடவடிக்கைகளுக்காக இலண்டன் கோபுரத்தில் வைத்து சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ சப்பான் சரணடைந்ததையும், கொரியா சப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.

1947 – இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.

1947 – முகமது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.

1948 – கொரியக் குடியரசு உருவானது.

1950 – அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.

1954 – அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.

1960 – கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 – இசுக்கொட்லாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1963 – மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.

1974 – தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார்.

1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.

1977 – ஒகைய்யோ பல்கலைக்கழகத்தினால் இயக்கப்பட்ட பிக் இயர் என்ற வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஈர்ப்பிலா வெளியில் இருந்து வானொலி சமிக்கை ஒன்றைப் பெற்றது. இந்நிகழ்வு "வாவ்! சமிக்ஞை" என அழைக்கப்பட்டது.

1984 – துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது.

1998 – பிரித்தானியாவில் வட அயர்லாந்து, ஓமா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர், 220 பேர் காயமடைந்தனர்.

2005 – காசாக்கரையில் இருந்தும், மேற்குக் கரையின் வடக்கேயுள்ள நான்கு இசுரேலியக் குடியேற்றங்களிலும் இருந்து இசுரேலியரை வெளியேற்றும் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.

2005 – இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30-ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.

2013 – ஒலிங்கிட்டோ என்ற புதிய புலாலுண்ணும் மிருக இனத்தை அமெரிகக் கண்டத்தில் கண்டுபிடித்திருப்பதாக சிமித்சோனிய நிறுவனம் அறிவித்தது.

2015 – வட கொரியா தனது நேரத்தை அரை மணி நேரம் பின்னோக்கி நகர்த்தியது. இது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தில்லிருந்து 8½ மணி முன்னோக்கியதாகும்.

இன்றைய பிறப்புகள்


1195 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசக் குருவானவர், புனிதர் (இ. 1231)

1769 – நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821)

1865 – மிக்கோ உசுயி, சப்பானிய மதத் தலைவர் (இ. 1926)

1872 – அரவிந்தர், இந்திய குரு, மெய்யியலாளர் (இ. 1950)

1882 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர் (இ. 1960)

1883 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1971)

1892 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழ் வரலாற்றாளர் (இ. 1960)

1892 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1987)

1896 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1957)

1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (இ. 1976)

1915 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கைத் தமிழ் ஆங்கிலக் கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர் (இ. 1983)

1917 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (இ. 1980)

1921 – கா. கைலாசநாதக் குருக்கள், ஈழத்து இந்து ஆய்வாளர், பேராசிரியர் (இ. 2000)

1922 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், பேராசிரியை (இ. 2011)

1922 – வி. கல்யாணம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2021)

1922 – குஷபாவு தாக்கரே, இந்திய அரசியல்வாதி (இ. 2003)

1930 – சுவாமி தயானந்த சரசுவதி, தமிழக மரபுவழி அத்வைத வேதாந்த ஆசிரியர் (இ. 2015)

1931 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)

1935 – ராஜசுலோசனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2013)

1945 – காலிதா சியா, வங்காளதேசத்தின் 9வது பிரதமர்

1948 – பாரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1954 – ஸ்டீக் லார்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 2004)

1961 – சுஹாசினி, தென்னிந்திய நடிகை

1963 – அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு, மெக்சிக்கோ இயக்குநர்

1964 – அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1964 – மெலிண்டா கேட்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர்

1972 – பென் அஃப்லெக், அமெரிக்க நடிகர்

1975 – விஜய் பரத்வாஜ், இந்தியத் துடுப்பாளர்

1989 – ஜோ ஜோனஸ், அமெரிக்கபாடகர், நடிகர்

1989 – கார்லோஸ் பேனா, அமெரிக்க பாடகர், நடிகர்

1990 – ஜெனிபர் லாரன்ஸ், அமெரிக்க நடிகை

1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க ஆட்ட வீரர்

இன்றைய இறப்புகள்


1038 – முதலாம் இசுடீவன், அங்கேரிய மன்னர் (பி. 975)

1328 – எசூன் தெமூர், யுவான் பேரரசர் (பி. 1293)

1942 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர், நூலாசிரியர் (பி. 1892)

1953 – லுட்விக் பிராண்டில், செருமானிய இயற்பியலாளர் (பி. 1875)

1975 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தின் 1வது அரசுத்தலைவர் (பி. 1920)

2013 – செல்லையா பொன்னத்துரை, இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935)

2013 – மரீச் மான் சிங் சிரேஸ்தா, நேபாளத்தின் 28-வது பிரதமர் (பி. 1942)

2018 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (பி. 1941)

2019 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1961)

இன்றைய சிறப்பு நாள்


இந்தியாவின் விடுதலை நாள் (1947, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து)

விடுதலை நாள் (வட கொரியா, தென் கொரியா, 1945-இல் சப்பானிடம் இருந்து)

விடுதலை நாள் (கொங்கோ குடியரசு, 1960-இல் பிரான்சிடமிருந்து)

தேசிய துக்க நாள் (வங்காளதேசம்)