தேவையானவை: 

  • முட்டை 3. 
  • பெரிய வெங்காயம் - 2, 
  • தக்காளி - 2. 
  • கரம் மசாலாதூள் டீஸ்பூன், 
  • மிளகாய்தூள் -அரை டீஸ்பூன், 
  • தனியாதூள் - கால் டீஸ்பூன், 
  • மஞ்சள்தூள் - ஒரு அரை சிட்டிகை, 
  • உப்பு - கால் டீஸ்பூன் 
  • பரோட்டா - 3. 
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 3 டீஸ்பூன். 
  • கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு. 
  • எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை 

பரோட்டாவை பொடிப் பொடியாக நறுக்குங்கள், வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் நன்கு எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கிக் கொண்டிருக்கும்போதே, கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி, தக்காளியையும் போட்டுக் கிளறுங்கள். ஒரு கிளறு கிளறியபின், பரோட்டா துண்டுகளையும் போட்டுக் கிளறவேண்டும். பரோட்டா நன்கு சூடானதும். அடுப்பை ஸிம்மில் வைத்து, தோசைக்கரண்டியால் கொத்திக் கொத்திக் கிளறவேண்டும்.

பிறகு, அடித்து வைத்திருக்கும் முட்டையையும் பரவலாக ஊற்றி, நன்கு கொத்திக் கொத்திக் கிளறுங்கள். தக்காளி சேர்ந்திருப்பதால், ஓரளவுதான் உதிரும். நன்கு கிளறி மல்லித்தழை தூவி. இறக்குங்கள். காரம் வேண்டு மென்றால், மிளகுதூள் தூவிக் கிளறிப் பரிமாறுங்கள். ஆனியன் ராய்த்தா. இதற்கு சூப்பர் காம்பினேஷன்,