வேலூர் மின்பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்நிறுத்தம்.

ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.