Mechanic killed in Munvirottam dispute near Navalpur Karumariamman temple


ராணிப்பேட்டை எல்.எப்.ரோடு காவக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருக்கும் ஆத்துக்கால்வாய் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நவல்பூர் கருமாரியம்மன் கோவில் அருகில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது விஜய், சதீஷ்குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமார் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சதீஷ்குமாரின் மனைவி மகாலட்சுமி ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் கொலை விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.