The driver was found dead in the tanker truck

டேங்கர் லாரியில் இறந்தநிலையில் இருந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உப்புப்பேட்டை அருகே முப்புதாரில் பால் டேங்கர் நிற்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது டேங்கர் லாரி டிரைவர் இறந்து கிடந்தார். அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்த குமரேசனா (40) என தெரியவந்தது.

விசாரணையில், சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே உள்ள பால்பண்ணைக்கு டேங்கர் மூலம் பால் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் குமரேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.