2 school students drowned in a lake near Banavaram and slipped and fell while catching a sacrificial fish

பாணாவரம் அருகே மீன் பிடித்தபோது 2 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியானார்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் பிரதீஷ் (வயது 12). பழையபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பரசு (15), பாணாவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இருவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருவதால் சிறுவயது முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஏரிக்கு சென்று கரையின் ஓரத்தில் அமர்ந்து மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது கால் வழுக்கி ஏரியில் விழுந்து நிரில் முழ்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து ஓடிவந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு பிரதீஷை பாணாவரம் அரசு மருத்துவமனையிலும், அன்பரசை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் அருகருகே உள்ள வீடுகளை சேர்ந்த 2 மாணவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.