Wife strangled by 'shoe lace', brutality in Ranipet TMN street
ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரத்தைச் சேர்ந்தவர் ஷேக்கபார் (78). இவருக்கு மூன்று மனைவிகள். இதில் மூன்றாவது மனைவியின் மகன் சுலை மான்சேட்(40).

ராணிப்பேட்டை, நவல்பூா் டிஎம்என் தெருவில் வசித்து வருகிறார் சுலைமான் சேட் (40). இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு முகமது பிலால் (15), முகமது ரீகான்(12) என இரண்டு மகன்கள் உள்ளனர். சுலைமான் தனியார் காஸ் கம்பெனியில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மனைவி மும்தாஜின் நடத்தை மீது சுலை மானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் மும்தாஜ் அதை பொருட் படுத்தவில்லை. நேற்று காலை வழக்கம்போல் மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்றபிறகு, சுலை மான் தனது மனைவியின் நடத்தை குறித்து மீண்டும் கண்டித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுலைமான், மனைவி மும்தாஜ் கழுத்தை ஷூ லேசால் இறுக்கி கொலை செய்தார். உடன் தகவல் அறிந்த ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மும்தாஜ் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சுலைமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.