தக்கோலம் அடுத்த அரிகலப்பாடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (42).

செங்கல் அறுக்கும் தொழிலாளியான இவர் கடந்த 28ம் தேதி அங்குள்ள சேம்பரில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த லாரியை அதன் டிரைவர் பின்னால் இயக்கினார். ஜெயபிரகாஷ் மீது லாரி மோதியது. பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளோர் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். தக்கோலம் எஸ் ஐ மனோகர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகிறார்.