Free education in an international school for a girl with great memory

திருவள்ளூர் மாவட்டம் பைவலசை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், சத்யா தம்பதியரின் பெண் குழந்தை சஹானா(7). சோளிங்கரில் உள்ள ஸ்ரீசைதன்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தன்னுடைய அபார நினைவாற்றலால் உலக நாட்டின் பெயர்கள் 2 மற்றும் அதன் தலைநகரம், 60 தமிழ் வருடங்களின் பெயர்கள், உலக அதிசயங்கள், தமிழ் திதிகள் மற்றும் எந்த பெயர்கள் உச்சரித்தாலும் அதற்கான ஆங்கில எழுத்துக்களை பிழையின்றி கூறுதல், போன்ற திறமையை கொண்டுள்ளார்.
அமைச்சர் காந்தி, அச் சிறுமி வீட்டுக்கு சென்று குழந்தையின் அறிவுத் திறனை பாராட்டினார். சிறுமியின் பள்ளி, கல்லூரி செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஜிகே உலகப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பு சிறுமி தனது நினைவாற்றலை வெளிப்படுத்தினார். சிறுமியை பாராட்டிய அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, சிறுமி சஹானாவுக்கு ஜிகே உலகப்பள்ளியில் சேர்க்கைக் கான ஆணையை வழங்கினார். அமைச்சர் காந்தி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார், ஜிகே இண்டர்நேஷனல் பள்ளி இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி உடன் இருந்தனர்.