வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி, ஆனந்தன் (42). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. பல மாதங்களாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக முதலில் வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.