ஆற்காடு அருகே சாலையில் நின்ற வாலிபர் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்.
ஆற்காடு பெரிய அசேன்புராஷா நகரை சேர்ந்தவர் முகமது இம்ரான்(24), கார் டிரைவர். இவர், கடந்த 16ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார், முகமது இம்ரான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்த மக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி முகமது இம்ரான் நேற்று முன்தினம் பரிதாப மாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி முகமது இர்பான், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ மகாராஜன் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடி வருகிறார்.