அரக்கோணம் அடுத்த கைனூர் கிராமத்தை சேர்ந் தவர் மூர்த்தி(56). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 19ம்தேதி இரவு 8 மணியளவில் கைனூரில் இருந்து பைக்கில் சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

சோளிங்கர் அரக்கோணம் நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. மூர்த்தி படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ளோர் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிபெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மூர்த்தி இறந்தார். 

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.