👉 1932ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஒளிப்படச்சுருளை கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்தார்.

👉 1794ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி எலி விட்னி என்பவர் பஞ்சை தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.

👉 2018ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்.


முக்கிய தினம் :-


பை தினம்

🌟 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. இது பை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

🌟 அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.


உலக சிறுநீரக தினம்

👉 ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

👉 அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


கார்ல் மார்க்ஸ்

✍ உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார்.

✍ இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர்.

✍ பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.

✍ பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் தனது 64வது வயதில் 1883ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

🌟 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌟 இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

🌟 இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு' பிறந்தது.

🌟 குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

🌟 ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌟 இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்' என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் தனது 76வது வயதில் (1955) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார்.

1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.

1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.

1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.[1]

1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.

1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2]

1900 – “தங்கத் தகுதரச் சட்டம்” அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.

1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.

1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.

1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.

1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.

1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.

1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.

1961 – இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி கலிபோர்னியாவில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

1978 – இசுரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.

1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.

1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.

1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.[3]

1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.

1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.

1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.

2019 – மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)

1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)

1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)

1895 – குருமுக் நிகால் சிங், இந்திய அரசியல்வாதி

1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),

1933 – மைக்கேல் கெய்ன், ஆங்கிலேய நடிகர்

1948 – பில்லி கிறிசுடல், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்

1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்

1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்

1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்

1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்

1994 – ஏன்சல் எல்கோர்ட், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள்


1883 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)

1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)

1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)

1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)

2007 – இசுடெல்லா செஸ், அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)

2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)

2018 – ஸ்டீவன் ஹாக்கிங், ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)

2018 – வசந்தா வைத்தியநாதன், ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்

இன்றைய தின சிறப்பு நாள்


நானக்சாகி புத்தாண்டு (சீக்கியம்)

மாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)

தாய்மொழி நாள் (எசுத்தோனியா)

பை நாள்