ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவலன் தலைமை வகித்தார். வாலாஜா தாலுக்கா குழு செயலாளர் கார்த்திக் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ் செல்வம் கண்டன உரையாற்றினார் மேலும் இதில் குமார் , தவராஜ். , இந்திரகுமார் நவீன் குமார் சேட்டு சத்தியமூர்த்தி செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்று ஒன்றிய மோடி அரசை கண்டித்து திருமண உதவி திட்டம் வறுமையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கிட , ரயிலில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.