ஆற்காடு அடுத்த புதுமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர்‌ கதிரவன்‌(23), தொழிலாளி... இவருக்கும்‌ நந்தினி என்பவருக்கும்‌ கடந்த 3 ஆண்‌டுகளுக்கு முன்பு திருமணம்‌ நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில்‌ ஒரு பெண்‌ குழந்தை உள்ளது. கதிரவன்‌ சரிவர வேலைக்கு செல்லாமல்‌ ஊர்‌ சுற்றி வந்துள்ளார்‌. இதனால்‌, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல்‌, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில்‌ நந்தினி கணவரிடம்‌ கோபித்து கொண்டு அவரது தாய்‌ வீட்டிற்கு. 'சென்று விட்டார்‌ இதனால்‌, கதிரவன்‌ மனவேதனையில்‌ இருந்துள்ளார்‌.

இந்நிலையில்‌, கடந்த 22ம்‌ தேதி வீட்டில்‌: 'இருந்த கொசு மருந்தை கதிரவன்‌ குடித்துள்ளார்‌.. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர்‌ அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில்‌ சேர்த்தனர்‌. மேல்‌ சிகிச்சைக்காக வேலூர்‌ அரசு மருத்துவமனையில்‌ சேர்க்கப்பட்டார்‌. அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்‌ பரிதாபமாக இறந்தார்‌. இதுகுறித்து கதிரவனின்‌ தந்‌ைத முனி 'வேல்‌ ஆற்காடு தாலுகா போலீசில்‌ புகார்‌ செய்தார்‌. அதன்பேரில்‌, இன்ஸ்பெக்டர்‌ காண்டீபன்‌ வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகிறார்‌.