முப்பதுவெட்டி கிராமத்தில் காதல் தகராறு காரணமாக வாலிபர் கொலையா ஆற்காடு டவுன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அற்காட் அடுத்த முப்பதுவெட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா வயது 25 இன்று காலை இவர் முப்பதடி கிராமம் ஏரிக்கரை அருகே வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் சூர்யா காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.