வாலாஜா தாலுகா திருப்பாற்கடல் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க நாடோடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை, திருப்பாற்கடல் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, மர்ம நபர்கள் முழு நிர்வாணமாக்கி முகத்தை கல்லால் சிதைத்து மர்ம நபர்கள் கொலை செய்து சாலையில் இன்று வீசிவிட்டு சென்றுள்ளனர். 

காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, கொலையான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பாற்கடல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.