👉 2013ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் மறைந்தார்.

👉 1917ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் மறைந்தார்.

பிறந்த நாள் :-

பிரகாஷ் வீர் சாஸ்திரி


🌟 தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

🌟 இவர் 'என்னைவிட சிறந்த பேச்சாளர்' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துகள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

🌟 இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.

🌟 உத்தரப்பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.

🌟 அபார பேச்சாற்றல் கொண்டவரும் தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 53வது வயதில் (1977) மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.

இரமண மகரிஷி


🌷 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடராமன்.

🌷 அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர், திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'இரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும்.

🌷 இவரை பின்பற்றியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் ஆவார். இவர் தன்னுடைய 70வது வயதில் (1950) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


📌1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.


📌1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.


📌1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.


📌1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.


📌1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.


📌1897 – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக் கொண்டது.


📌1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.


📌1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.


📌1916 – உருசிய மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்சு யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் மாஸ்கோ ஆறொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


📌1916 – அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லசு முடிசூடினார்.


📌1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.


📌1924 – யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


📌1924 – நாள்மீன்பேரடைகள் பலவற்றின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.


📌1941 – மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.


📌1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.


📌1947 – பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


📌1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.


📌1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.


📌1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.


📌1993 – இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.


📌1996 – அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.


📌1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.


📌2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.


📌2004 – அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.


📌2006 – எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.


📌2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.


📌2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.


📌2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.


📌2013 – காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்


📌39 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (இ. 81)


📌1865 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1936)


📌1879 – இரமண மகரிசி, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. 1950)


📌1887 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1971)


📌1895 – எஸ். இராமநாதன், தமிழக அரசியல்வாதி (இ. 1970)


📌1917 – பாய் மோகன் சிங், இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி


📌1923 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, சமக்கிருத அறிஞர் (இ. 1977)


📌1930 – தூ யூயூ, நோபல் பரிசு பெற்ற சீன மருத்துவர்


📌1950 – பியார்னே இசுற்றூத்திரப்பு, தென்மார்க்கு கணினி அறிவியலாளர்


📌1975 – டைகர் வுட்ஸ், அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்


இன்றைய தின இறப்புகள்


📌274 – முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)


📌1896 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர் (பி. 1861)


📌1916 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மந்திரவாதி (பி. 1869)


📌1944 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1866)


📌1947 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1861)


📌1968 – திறிகுவே இலீ, நோர்வே அரசியல்வாதி, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (பி. 1896)


📌1971 – விக்கிரம் சாராபாய், இந்திய இயற்பியலாளர் (பி. 1919)


📌1973 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1904)


📌1988 – இசாமு நொகுச்சி, அமெரிக்க சிற்பி (பி. 1904)


📌1997 – ப. சிங்காரம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)


📌2006 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)


📌2006 – சந்திரலேகா, பரத நாட்டியக் கலைஞர் (பி. 1928)


📌2009 – விஷ்ணுவர்தன், கன்னடத் திரைப்பட நடிகர் (பி. 1949)


📌2010 – பொபி ஃபாரெல், பொனி எம் பாப் இசைக் குழு உறுப்பினர் (பி. 1949)


📌2012 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1909)


📌2013 – கோ. நம்மாழ்வார், தமிழ்நாட்டு இயற்கை ஆர்வலர் (பி. 1938)


📌2014 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1949)


📌2014 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1927)


இன்றைய தின சிறப்பு நாள்


📌ரிசால் நாள் (பிலிப்பீன்சு)