👉 1948ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் மறைந்தார்.
🏁 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார்.
👉 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார்.
முக்கிய தினம் :-
😃 ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன்முதலில் 1998ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது.
😃 அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
💉 ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
💉 மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய்-சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
💉 இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நினைவு நாள் :-
👉பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.
👉இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.
👉போர்களில் வெற்றியைக் குவித்தார். தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை கோட் ஆஃப் நெப்போலியன் எனப்படுகின்றன. முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் 1821ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
✍ உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார்.
✍ இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர்.
✍ பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.
✍ பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் தனது 64வது வயதில் (1883) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.
1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார்.
1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.
1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1762 – கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது.[1][2]
1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை வழங்கியது.
1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் நாடு கடத்தப்பட்ட நிலையில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் செயிண்ட் எலனா தீவில் இறந்தார்.
1838 – இந்தியாவில் இருந்து முதல் தொகுதி தொழிலாளர்கள் கயானா வந்தடைந்தனர்.
1860 – கரிபால்டி ஆயிரக்கணக்கானோருடன் செனோவாவில் இருந்து சிசிலியைக் கைப்பற்றப் புறப்பட்டார். இத்தாலி இராச்சியம் உருவானது.
1862 – சிங்க்கோ டே மாயோ: புவெப்லா சண்டை: மெக்சிக்கோவில் இக்னேசியோ சரகோசா தலைமையிலான படைகள் பிரெஞ்சு முற்றுகையை முறியடித்தன.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பு அரசு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1866 – நினைவு நாள் முதல் தடவையாக அமெரிக்காவின் வாட்டர்லூ நகரில் கொண்டாடப்பட்டது.
1912 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இல் இருந்து முதன் முதலாக வெளியிடப்பட்டது.
1925 – தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.
1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றின.
1940 – இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நார்வே போர்த்தொடர்: நார்வே படைக்ள் எக்ரா, வின்யசுவிங்கன் சண்டைகளில் செருமனியப் படைகளிடம் சரணடைந்தன.
1941 – எதியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தின் கிளெய்சோரா கிராமத்தில் 216 பொதுமக்களைப் படுகொலை செய்தன.
1944 – மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் செருமனியின் பிடியில் இருந்து பிரித்தானியப் படைகளால் விடுவிக்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பை எதிர்த்து பிராகா நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1946 – போர் குற்றம், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 28 சப்பானிய இராணுவ, அரச அதிகாரிகள் மீது பன்னாட்டு விசாரணை டோக்கியோவில் ஆரம்பமானது.
1950 – தாய்லாந்தின் மன்னராக பூமிபால் அதுல்யாதெச் ஒன்பதாவது ராமா என்ற பெயரில் முடி சூடினார்.
1955 – மேற்கு செருமனி முழுமையான விடுதலை அடைந்தது.
1961 – மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
1972 – இத்தாலிய வானூர்தி சிசிலியில் லோங்கா மலையில் மோதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 115 பேரும் உயிரிழந்தனர்.
1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
1980 – ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவை தாக்குதலை ஆரம்பித்தது.
1981 – அயர்லாந்து புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் 66 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இருந்து தனது 27வது அகவையில் காலமானார்.
1992 – கோர்சிகாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
1994 – நகோர்னோ கரபாக் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்த ஆர்மீனியா, அசர்பைஜான் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
2006 – சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2007 – கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் உயிரிழந்தனர்.
2014 – ஏஜியன் கடலில் கிரேக்கக் கரையோரப் பகுதியில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரன்டு படகுகள் மோதிக் கொண்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.
2018 – வடகொரியாவின் நேரம் 30 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டு, தென் கொரியா மற்றும் சப்பான் நேரங்களுடன் சமப்படுத்தப்பட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1479 – குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574)
1752 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830)
1813 – சோரன் கீர்க்கே கார்ட், டென்மார்க் மெய்யியலாளர் (இ. 1855)
1818 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1883)
1833 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானிய புவியியலாளர், கல்வியாளர் (இ. 1905)
1862 – நிக்கோ பிரொசுமானி, சியோர்சிய ஓவியர் (இ. 1818)
1864 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1922)
1883 – ஆர்ச்சிபால்ட் வேவல், ஆங்கிலேய தளபதி, பிரித்தானிய இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (இ. 1950)
1903 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி. (இ. 1991)
1911 – பிரிட்டிலடா வதேதர், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1932)
1916 – ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1987)
1916 – பி. யு. சின்னப்பா, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)
1922 – டி. ஆர். ராஜகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)
1933 – இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது பிரதமர் (இ. 2016)
1943 – மைக்கேல் பாலின், ஆங்கிலேய நடிகர்
1951 – குல்சன் குமார், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1997)
1964 – ஆறுமுகம் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2020)
இன்றைய தின இறப்புகள்
1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் (பி. 1769)
1859 – டிரிஃக்லெ, செருமானியக் கணிதவியலாளர் (பி. 1805)
1953 – ஆர். கே. சண்முகம், இந்தியப் பொருளாதார நிபுணர் (பி. 1892)
1957 – தேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)
1981 – பொபி சான்ட்ஸ், ஐரியப் புரட்சியாளர் (பி. 1954)
1995 – லடிஸ் வீரமணி, இலங்கை மேடை நாடக நடிகர், நாடகாசிரியர், நாடக இயக்குநர்
2007 – தியோடோர் மைமான், சீரொளியைக் கண்டுபிடித்த அமெரிக்க-கனடிய இயற்பியலாளர் (பி. 1927)
2010 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 12வது அரசுத்தலைவர் (பி. 1951)
2012 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1950)
2021 – டி. கே. எஸ். நடராஜன், தமிழகத் திரைப்பட நடிகர், நாட்டுப்புறப் பாடகர் (பி. 1933)
இன்றைய தின சிறப்பு நாள்
பன்னாட்டு மருத்துவச்சிகள் நாள்
குழந்தைகள் நாள் (யப்பான், தென் கொரியா)
இந்தியர்கள் குடியேற்ற நாள் (கயானா)
விடுதலை நாள் (டென்மார்க், நெதர்லாந்து)