👉 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே இலங்கையில் உள்ள ரத்தினபுரி நகரில் பிறந்தார்.
👉 1899ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் பிறந்தார்.
👉 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் மறைந்தார்.
முக்கிய தினம் :-
🍁 உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
🍁 இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நினைவு நாள் :-
👉நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் விதத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
👉1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.
👉இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம் காந்தி. அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று நேரு புகழ்ந்துள்ளார்.
👉நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 87-வது வயதில் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
🌹 இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
🌹 இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.
🌹 வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
🌹 இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
🌹 இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் (1805) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார்.
1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது.
1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் மீது நடந்த மிகப்பெரும் ஊடுருவலாக இது கணிக்கப்படுகிறது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகி, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பில் 8-வது மாநிலமாக இணைந்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.
1895 – முதலாம் சீன சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையைக் கைவிட்டது. சீனக் குடியரசின் பெங்கியெனின் தெற்குப் பகுதியை சப்பானிடம் கொடுத்தது.
1912 – உருசியப் படையினர் சைபீரியாவின் வடகிழக்கில் பணிநிறுத்தம் செய்த தங்கச் சுரங்கத் தொழிலாளர் மீது சுட்டதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியப் பேரரசு செருமனியிடம் சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் மொண்டீசு நகரம் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1946 – கடைசி பிரான்சியப் படையினர் சிரியாவில் இருந்து வெளியேறினர்.
1949 – அயர்லாந்தின் 26 மாவட்டங்கள் பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகின.
1961 – அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியது.
1969 – செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
1978 – ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார்.
1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
2006 – டெல் அவீவ் உணவகம் ஒன்றில் பல்லத்தீன தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
2013 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் உரத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
2014 – நாசாவின் கெப்லர் விண்கலம் பிறிதொரு விண்மீனின் வாழ்தகமைப் பகுதியில் புவிக்கு ஒப்பான கோள் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியது.
இன்றைய தின பிறப்புகள்
44 – எவரிஸ்துஸ் (திருத்தந்தை) (இ. 107)
1598 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ. 1671)
1756 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
1899 – வின்சென்ட் விகில்சுவொர்த், பிரித்தானிய உயிரியலாளர் (இ. 1994)
1910 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (இ. 2012)
1912 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1999)
1915 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (இ. 2000)
1916 – ஆ. தியாகராசா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1981)
1917 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1989)
1959 – சான் பீன், ஆங்கிலேய நடிகர்
1966 – விக்ரம், தமிழ்த் திரைப்பட நடிகர்
1972 – முத்தையா முரளிதரன், இலங்கைத் துடுப்பாளர்
1979 – சித்தார்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர்
1981 – சாந்தி சௌந்திரராஜன், தமிழக தடகள விளையாட்டு வீராங்கனை
1981 – மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)
இன்றைய தின இறப்புகள்
1680 – கத்தேரி தேக்கக்விதா, அமெரிக்கப் புனிதர் (பி. 1656)
1790 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706)
1859 – தாந்தியா தோபே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1814)
1942 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1870)
1946 – வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
1975 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1888)
1989 – மு. ச. காரியப்பர், இலங்கை அரசியல்வாதி (பி. 1899)
1992 – புலியூர்க் கேசிகன், தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1923)
1994 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1913)
2004 – சௌந்தர்யா, தென்னிந்திய நடிகை (பி. 1971)
2013 – டி. கே. ராமமூர்த்தி, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)
2013 – வி. எஸ். ரமாதேவி, கருநாடக மாநிலத்தின் 13வது ஆளுநர் (பி. 1934)
2014 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
2014 – கர்பால் சிங், மலேசிய அரசியல்வாதி (பி. 1940)
2015 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர், உளவியலாளர் (பி. 1940)
2021 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1961)
இன்றைய தின சிறப்பு நாள்
உலக ஈமோபீலியா நாள்
பெண்கள் நாள் (காபோன்)
விடுதலை நாள் (சிரியா, பிரான்சிடம் இருந்து 1946)