தயாரா வையுங்க... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்கு அலெர்ட்!
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-  

'அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு  பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரனோ வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள் , மருத்துவ உபகரணங்கள் , ஆக்சிஜன் வசதிகள் , மருந்துக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.